Home இலங்கை சுற்றுலாத் துறைக்காக இரண்டு பிரிவுகளின் கீழ் 1000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும்

சுற்றுலாத் துறைக்காக இரண்டு பிரிவுகளின் கீழ் 1000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும்

0
சுற்றுலாத் துறைக்காக இரண்டு பிரிவுகளின் கீழ் 1000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும்

இலங்கையின் சுற்றுலாத் துறைக்காக 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானத்தின்படி, 6-15 பயணிகள் அமரக்கூடிய 750 வேன்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 16-30 இருக்கைகள் கொண்ட சிறிய பேருந்துகள் அல்லது 30-45 இருக்கைகள் கொண்ட பெரிய பேருந்துகள் உட்பட 250 பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் காரணமாக வாகன இறக்குமதிக்கு தடை விதித்த இலங்கை, அதன் பின்னர் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தடையை நீட்டித்தது. எவ்வாறாயினும், வாகன இறக்குமதித் தடை அவ்வப்போது தளர்த்தப்பட்டு விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளது, சில புதிய வாகனங்களைக் கொண்டுவருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறையானது வாகன இறக்குமதிக்கான அனுமதியைப் பெறும் சமீபத்திய தொழில்துறையாக மாறியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version