தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கடவுச்சீட்டு வழக்கில் இருந்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார் என அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.2015 ஆம் ஆண்டு, துபாய் மற்றும் இத்தாலியில் உள்ள இலங்கையர்களின் அழைப்பின் பேரில், தொடர் விரிவுரைகளுக்காக ஐரோப்பாவிற்கு பயணிக்க எம்.பி தயாராகிக் கொண்டிருந்த போது, காலாவதியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வீரவன்ச வெளிநாடு செல்வதாக குற்றம் சாட்டப்பட்டார். எவ்வாறாயினும், விமான நிலையத்திற்கு வந்தபோது, தன்னிடம் இருந்த கடவுச்சீட்டு தொலைந்து போனதாகவும், பின்னர் புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்ட பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட கடவுச்சீட்டு என்பதை உணர்ந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறியிருந்தார்.