காஸாவின் மோதலால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான காசோலையை பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லாஹ் ஸெய்டிடம் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நன்கொடையானது ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட காஸாவின் குழந்தைகள் நிதியத்தின் ஒரு பகுதியாகும், மேலும் கூடுதல் நன்கொடையாளர்கள் பங்களிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.