பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் கடை ஒன்றின் முன்பாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (16) தல்கஸ்வல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, குற்றத்தைத் திட்டமிட உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரும் அதற்கு உதவிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் தல்கஸ்வல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர்கள். குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் மூன்று கையடக்க தொலைபேசிகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி, பிடிகல குருவல சந்தியில் உள்ள கடையொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் T-56 துப்பாக்கியால் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.