மேல் மாகாணங்களில் சுகாதாரத் துறை ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் மாகாண ஆளுநர் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் குணதிலகவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.மேல் மாகாணத்தில் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்களின் முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வழங்கிய பணிப்புரைக்கு அமைய இடமாற்றங்களை தற்காலிகமாக இரத்து செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மேல்மாகாணத்தில் வருடாந்த இடமாற்றங்கள் முறையற்ற முறையில் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.