இலங்கை கிரிக்கெட் சங்கத்திற்கும் ஜப்பான் கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

0
119

இலங்கை கிரிக்கெட் சங்கத்திற்கும் ஜப்பான் கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கை வீரர்கள், கிரிக்கெட் அணிகள், பயிற்சியாளர்கள் மற்றும் மைதான ஊழியர்கள் ஜப்பானுக்கு அனுப்பப்படுவதுடன், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மேலதிக பயிற்சிக்காக இலங்கைக்கு வர வாய்ப்பு கிடைக்கும். ஜப்பானில் நடைபெறும் T20 போட்டிகளுக்கு இலங்கை அணிகள் அனுப்பப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய வீரர்களும் எல்பிஎல் அணிகளுடன் பயிற்சி பெற வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here